×

பாஜக-வின் அடிமையாகிவிட்ட அதிமுக அரசை மக்கள் தூக்கி எரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது!: காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடிமையாகிவிட்டதாக அதிமுக பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரசின் பிரச்சார நிர்வாகத்தின் ஏ.ஐ.சி.சி பார்வையாளராக இருக்கும் திரு. மொய்லி, அதிமுகவை கூட்டாட்சி முறையை நிலைநிறுத்தத் தவறியதாகவும், பா.ஜ.க. அதிமுகவின் புரவலராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். பாஜகவின் அடிமையாகிவிட்ட அதிமுக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மொய்லி, மாநிலங்களவையில் அதிமுக ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறி இருக்காது.

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என அதிமுக பொய் உரைக்கிறது என குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேறவும் அதிமுக ஆதரவு தான் காரணம் என்று மொய்லி குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. வாக்கெடுப்பை புறக்கணித்ததன் மூலம் இலங்கை தமிழர் நலனில் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று காட்டிவிட்டது என மொய்லி தெரிவித்துள்ளார். கலைஞரிடம் நேரடி பயிற்சி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் இயல்பான தலைவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்; இது நிச்சயமாக நடைபெறும் என குறிப்பிட்டார்.


Tags : Pajaga ,Kong ,Shahman Moiley , BJP, slave, AIADMK, Veerappa Moily
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...